முயற்சி
முரட்டு மூங்கிலிலும்
காற்று நுழைந்து இசையாகும்
இருட்டு வேலையிலும்
நிலவு ஒளிர்ந்து வழிகாட்டும்
துன்பம் வந்ததென்று
தோழா துவண்டு வீழாதே
இன்பம் நாளை வரும்
தோழா முயற்சியை இழக்காதே
பூமி புதையும் விதையைபார்
நாளை விருட்சமாய் மாரும்
சிறைபட்ட நீர்துளியும் - ஒருநாள்
சிப்பியில் முத்தாகும்
விதியென்று வீழ்ந்து விட்டால் – புது
விதி செய்ய யார் வருவார்
தோல்விகள் விட்டு விடு – இனி
வெற்றியில் நிலைத்து விடு
சரித்திரம் படைப்பதற்கு – நீ
சத்தியம் செய்து கொடு
சந்தர்ப்பம் உனதாக்கு – புது
சந்தர்ப்பம் உருவாக்கு
கோல்களின் கோபத்தினால்
நடப்பது
நடக்கட்டுமே
நீ செயலிலே நிலைத்துவிடு – பாரில்
கோலோச்சும் நிலையை பெறு
நம்பிக்கைவித்து
ReplyDeleteஅருமையான கருத்துக்கள் வரிகளில்...
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா...
சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.
ReplyDelete