Posts

Showing posts from February, 2017

அயோக்கியன்

காட்டை அழித்து நகரம் ஆக்கியவனும் திருட்டுத்தனமாய் அனுமதி வாங்கி வீட்டுமணை போட்டவனிடம் மணை வாங்கி வீடுகட்டி விவசாயம் அழித்தவனும் சிவனென்று வருகையில் இயற்கை ஆர்வலனாகிறான். தன் சொந்த நிலத்தில் ஏக்கர் கணக்கில் சீமைகருவேலத்தை வளர்த்தவன் நிலத்தடி நீரைபற்றி வாய்கிழிய பேசுகிறான் விவாசாயி தற்கொலைக்கு ஒப்பாறி வைக்கின்றான் வெளிநாட்டு மோகத்தில் வெளிறிய புத்தி கொண்டவன் சொந்த பாரம்பரியம் அறிய இயலா அறிவிழிகள் பகுத்தறிவை பற்றி பக்கம் பக்கமாய் பம்மாத்து பேசுதுகள் தாடி வச்ச பெரியாரின் பகுத்தறிவை படிச்சவன் தன் அனுபவத்தில் இல்லாததை பெரிதாக்கி பேசுகிறான்