சிந்திக்க - 6
பொங்கல் திருநாள் நெருங்குகிறது. இந்த வேளையில் பலர் உழவர்களின் தொடர் உயிரிழப்பால் விரக்கதியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என்று முடிவெடுத்து அதை அறிக்கையாகவும் விடுகின்றனர்.
இந்நிலையில் நகரத்துவாசிகளே சற்று சிந்தியுங்கள் நமக்கு வயிற்றிற்க்கு சோறு போட்டவனுக்கு நன்றி செலுத்த இது வாய்ப்பு.
நண்பர்கள் சேர்ந்து பணம் வசூலித்து திரைப்படத்திற்கும், சுற்றுலாவிற்கும் என செலவு செய்தது போதும். நண்பர்களே குழுவாக இணைந்து ஏதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்கு உள்ளவர்களுக்கு புத்தாடை தந்து, பொங்கலிட்டு அவர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடலாமே.
நம் வயிறு நிறைய பாடு பட்டவனின் மனம் நிறையுமே.
தங்கள் வயிறு நிறைய உங்கள் மனதை மலடாக்கும் தொலைகாட்சி நிகழ்சிகளை தவிர்த்து வயிற்றிக்கீந்தவனை மகிழ வைப்போம்.
உழவனையும் உழவுத்தொழிலையும் கொண்டாடுவோம் உயிரோட்டமான வாழ்வை வாழ்வோம்.
பொங்கல் நாளிள் நகரங்கள் காலி ஆகட்டும் கிராமங்கள் அதிரட்டும்
அருமை ஐயா... இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...
ReplyDeleteகண்டிப்பாக. இளைஞர்கள் இதை செய்தால் கொண்டாட்டங்களின் புது பரிமாணம் வெளிப்படும்
Deleteஅருமையான யோசனை
ReplyDeleteசெயல்படுத்துவோம்
Deleteநல்லதொரு யோசனை. பாராட்டுகள்.
ReplyDeleteநல்ல யோசனை , திட்டமிட்டு செய்தால் பலன் இருக்கும்
ReplyDelete