குருவே சரணம்
நான்கு பிறவி எடுத்து வந்தாயே
என் குருவே நீயே
தியானலிங்கம் பிரதிஷ்டை செய்தாயே
பல பல சஞ்சலங்கள்
மனதிலே வந்து போக
தொழைந்ததை மீட்டு தந்தாயே
என் குருவே நீயே
சாதனம் பலவும் தந்து
என்னுள்ளே சிவனை உணர
உன்னுள்ளம் என்னில் வைத்தாயே
என் குருவே நீயே (நான்கு பிறவி)
இல்வாழ்க்கை துறவு வாழ்க்கை
வெவ்வேறு இல்லை என்று
ஒன்றாக அனைத்து கொண்டாயே
என் குருவே நீயே
உலகமே உன்னை ஏற்று
உயிரதில் மலர்ந்து மணக்க
மனிதனில் தெய்வம் செய்தாயே
என் குருவே நீயே (நான்கு பிறவி)
Comments
Post a Comment