முண்டாசு கட்டிக்கிட்டு முருக்கு மீசை வச்சுக்கிட்டு எளிய தமிழ் கவிதை பாட வந்தவன் நீ - எங்கள் பாரதம் காக்க வந்த பாரதி நீ மிரட்டும் பார்வை கொண்ட கண்கள் விரட்டும் வேகம் கொண்ட கால்கள் தன்னகத்தே கொண்ட பாவலன் நீ - எங்கள் உள்ளமதை கொள்ளை கொண்ட பாரதி நீ இலக்கணங்கள் கட்டி வைத்த மரபுக்கவிதைகளை புதுக்கவிதை யாக்கி தந்த புதல்வனும் நீ - எங்கள் கவிதைகளை வளர வைத்த பாரதி நீ
தெய்வம் இங்கே மண்ணில் வந்து என்னை பார்த்து சிரிக்க சித்தம் பித்தம் தெளிந்து உள்ளம் உண்மையிலே திளைக்க கடவுளை கண்ட பக்தனாக எல்லாம் ஒன்றில் அடங்க உன்மை கண்டேன்... குழந்தையும் தெய்வமும் ஒன்றே என்று
இழந்த வாழ்வை மீட்டுத் தந்த இளையவளே என்றும் எந்தன் உயிரை காக்கும் உமையவளே எண்ணம் எல்லாம் நிறைந்தவளே வாழ்வில் மாற்றம் ஏற்றம் தந்தவளே வைஷ்ணவியே வைஷ்ணவியே எனக்காய...
Comments
Post a Comment