64வது சுதந்திர தினம்

பார்க்கும் இடத்தில்
குப்பை போட்டு
நின்ற இடத்தில்
எச்சில் துப்பி
ஜாதியின் பேரில்
சண்டைகள் போட்டு
மாநிலங்களுக்கிடையில்
பிரச்சினை கிளப்பி
லட்சம் தந்தே
வேலையை முடித்து
அந்நிய பொருளை
நாளும் வாங்கி
வாழ்நாள் முழுவதும்
சொகுசாய் வாழ்ந்து - நாங்கள்
நாட்டின் அமைதியை
நாளும் குலைத்தாலும்

எங்கள் தவறுகளையெல்லாம்
குழந்தையின் குறும்புகளாய்
மன்னித்து...

காஷ்மீர் மலையில்
கொட்டும் பணியில்
நடுங்கும் குளிரில்
நம் தாயகத்தை காக்கும்
நாயகர்கள் பொற்பாதத்தில்
பணிந்து நன்றியுடன்,

ஒரு சாமானியனின்
உறுதிமொழி...

பாதை தவறி பல தவறுகள்
செய்தாலும் - ஐயா

குஜராத் கண்ணீர் துடைக்க
குமரி கை நீட்டும்
குமரி கடல் கோளுக்கு
காஷ்மீர் கண் கலங்கும்

இந்த உணர்வில் ஒற்றுமை
இன்று இல்லை
என்றும் நிலைக்கும் என்று
கைலாய மலை வாழும்
எங்கள் இராணுவ
சிங்கங்களுக்கு சத்தியம்
செய்து சமர்பிக்கிறேன்!

Comments

Post a Comment

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு